தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,733 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு பற்றிய முழு விவரங்களையும் தமிழக சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதனோடி, இன்று மற்றும் தமிழகத்தில் 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த வாரம் முதல் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும், நேற்று முதல் பாதிப்பு 1,700 க்கும் அதிகமாக உள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று மட்டும் தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 26,53,848 ஆக அதிகரித்துள்ளது.
ஜீ தமிழ் ரவுடி பேபி சத்யா சீரியலில் ஜெயித்த ரகசியம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 35,454 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 08 பேரும், அரசு மருத்துவமனையில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,631 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,01,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 17,196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இன்று மட்டும் 1,58,075 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தமிழகத்தில் 4,60,74,497 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இன்று ஒரே நாளில் 205 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 548725 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகள் அதிகரிப்பதால் தமிழகத்தில் ஏற்கனேவே அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.