தமிழகத்தில் மீண்டும் 1700 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நன்கு குறைந்திருந்த நிலையில், இன்று பாதிப்பு 1700 ஐ கடந்துள்ளது. அரசு அறிக்கையின் படி, இன்று மட்டும் 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பாதிப்பு:
நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.36 கோடிக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும், நாடு முழுவது, 4.46 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு குறைந்திருந்த நிலையில், பல தளர்வுகளை அரசு அளித்தது. மேலும், தமிழகத்தின் தினசரி பாதிப்பு 1600 க்கும் குறைவாக மட்டுமே பதிவாகி வந்தது. திடீரென்று இன்று பல நாட்களாகும் பின்னர், மீண்டும் 1700 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
IPL 2021, MI vs KKR LIVE Updates: கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கைக்கு 26,52,115 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி மருத்துவமனைகளில் 17,121 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இன்று மட்டும் 27 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,427 ஆக அதிகரித்து உள்ளது.
TN Job “FB Group” Join Now
இன்று 1,624பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,99,567 ஆக உள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 1,60,057 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தற்போது வரை 4,59,16,422 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இன்று மட்டும் சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக உள்ளது.