தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; 1700 ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி பாதிப்பு 1700 ஐ நெருங்குகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அறிகிய வெளியிட்டுள்ளது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்ச நிலையில் இருந்த மே, ஜூன் மாதங்களில் தினசரி பாதிப்பு 25,000 க்கும் அதிகமாக இருந்தது. பின்னர் தீவிர கட்டுப்பாடுகளினால் குறைந்து வந்த தினசரி பாதிப்பு 2,000 என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து அரசின் முயற்சியால் தினசரி பாதிப்பு கடந்த மாதம் முதல் 1700 க்கும் கீழான எண்ணிக்கையில் மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் பாதிப்பு 1700 ஐ நெருங்கியுள்ளது.
டி20 அணியின் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகல் – விராட் கோலியின் அதிர்ச்சி முடிவு!
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறையின் இன்றைய அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,693 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,40,361 பேர் ஆக அதிகரித்துள்ளது. மேலும், 25 பேர் இன்று தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,271 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,548 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதுவரையில் 25,88,334 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும், 16,756 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று மட்டும் மாநிலம் முழுவதும் 1,53,721 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும், 4,48,31,541 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னையில் புதிதாக 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.