தமிழகத்தில் இன்று 1,580 பேருக்கு கொரோனா உறுதி; சற்று குறைந்துள்ள பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் இன்று மட்டும் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வந்தது. இதனால் கடந்த மே மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் குறைந்து வந்த கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. இந்நிலையில், இன்று பாதிப்பு நிலை சற்று குறைந்து உள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்றைய தொற்று பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
நாடு முழுவதும் 75 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் தகவல்!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர். இவர்களில் 906 பேர் ஆண்கள், 674 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,35, 419ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,190 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,509 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,83,707 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைத்துள்ளது. இன்று மட்டும் 185 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை மாநிலம் முழுவதும் 4,43,74,784 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.