தமிழகத்தில் செப்.11 பாரதியாரின் நினைவு நாள் – அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழ் கவிஞரான பாரதியார் அவர்கள் தமிழ் மொழியில் எண்ணற்ற பாடல்களையும் கவிதைகளையும் படைத்தவர். இவர் மக்களால் மகா கவி என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் தமிழக அரசு பாரதியை போற்றும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாரதியார்:
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார் தமிழ் கவிஞர் பாரதியார். இவர் தனது 7ம் வயதிலேயே கவிதைகளை எழுத தொடங்கினார். இவரது தமிழ் புலமையையும், கவி பாடும் திறமையையும் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்னும் படத்தை வழங்கினார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாது இந்தி, வங்காளம், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளையும் கற்று தேர்ந்தார். அதன் பிறகு 1907ம் ஆண்டு ‘இந்தியா’ மற்றும் பால பாரதம் உள்ளிட்ட வார இதழ்களை நடத்தினார். இதில் இந்தியா வார பத்திரிகையை விடுதலைக்காக பயன்படுத்தினார்.
மேலும் இவர் 1904 முதல் 1906 வரை “சுதேச மித்திரன்” பத்திரிகையில் பணியாற்றினார். தனது எழுத்துக்கள் மூலமாக புரட்சியை ஏற்படுத்தினார். இவரது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் விடுதலைக்காக மட்டுமில்லாமல், பெண் சுதந்திரம், பெண் உரிமை மற்றும் சமூக மாற்றத்திற்காகவும் குரல் கொடுத்தார். இவரை பேரறிஞர் அண்ணா “மக்கள் கவி” என்று அழைத்தார். இவர் 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மண்ணுலகை விட்டு பிரிந்தார்.
திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து? தேவஸ்தானம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
தற்போது தமிழக அரசு பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி அன்று ‘மகாகவி நாள்’ ஆக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து நாளை நடைபெற உள்ள மகாகவி நாள் விழாவில் அமைச்சர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்