தமிழகத்தில் மேலும், குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 1,509 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்களையும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மட்டும் 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து பல மாதங்களுக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு தமிழகம் பாதிப்பின் உச்ச கட்ட அபாயத்தில் இருந்து மீண்டுள்ளது. இருப்பினும், தினசரி பாதிப்பு சற்று கவலை அளித்து வருகிறது. சிலநாட்களாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு மெல்ல 10,20 என்ற எண்ணிக்கையில் குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
‘பாக்கியலட்சுமி’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – டாப் சீரியல் ப்ரோமோ கமெண்ட்கள்!
அரசின் அறிக்கையின் படி, இன்று மட்டும் தமிழகத்தில் 1,509 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 26,16,381 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் 20 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,941 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 1,719 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,64,820 ஆக உள்ளது.
TN Job “FB Group” Join Now
இன்று மட்டும் 1,54,145 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,24,72,641 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 16,620 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை இன்று 17 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளனர். சென்னையை விட அதிகபட்சமாக கோவையில் 186 பேருக்கு தொற்று செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.