மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனி வார்டு – அமைச்சர் துவக்கி வைப்பு!!

0
மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனி வார்டு - அமைச்சர் துவக்கி வைப்பு!!
மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனி வார்டு - அமைச்சர் துவக்கி வைப்பு!!
மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனி வார்டு – அமைச்சர் துவக்கி வைப்பு!!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் மருத்துவமனையில் திருநங்கையர்களுக்கென தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வார்டை மருத்துவ கல்வி அமைச்சர் திறந்து வைத்தார்.

திருநங்கைகள்:

இந்தியாவில் ஆண், பெண் பாலினத்தவரை தாண்டி திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவர்களும் அதிக அளவில் உள்ளனர்.இவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் வழங்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருநங்கைகள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ள அனைத்து துறைகளிலும் சாதிக்க தேவையான உதவிகளையும் அரசு அளித்து வருகிறது.

அண்ணாமலை பல்கலையில் 1,390 பேருக்கான பணிநிரவல் குறித்த அதிரடி உத்தரவு – வாபஸ் பெற கோரிக்கை!!

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கென்று தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை மகாராஷ்டிரா மருத்துவ கல்லூரி அமைச்சர் திறந்து வைத்தார். இது போன்ற வார்டை மாநிலத்தின் மற்ற அரசு மருத்துவமனையிலும் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வார்டில் திருநங்கைகளுக்கென்று தனியாக கழிப்பறை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. திருநங்கைகள் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவமனையில் சிகிக்சைக்காக வரும் போது பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு மும்பையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!