ஒன்றிய அரசின் CAA சட்டம் ரத்து – தமிழக சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம்!
தமிழக அரசு துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை தீர்மானம்:
தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் இன்று அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் துவங்கிய 3வது அலை? ஒரே நாளில் 37,875 பேருக்கு கொரோனா! 369 பேர் பலி!
இந்த தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிய உள்ளார். செப்டம்பர் 13ம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. எனவே அவையின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை, மாலை என இரு வேளையும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர் புலமைப்பித்தன் காலமானார் – கட்சியினர் இரங்கல்!
அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அவை கூடும் நிலையில் சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை முதலியவற்றின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அதன் பின் செப்டம்பர் 9ம் தேதி காவல்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பின் 3 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து செப்டம்பர் 13ம் தேதி விவாதம் தொடரும் எனவும் அதனை தொடர்ந்து கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளித்து பேசுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கிய அவை வரும் 13ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அன்றைய தினம் கேள்வி நேரம் கிடையாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.