தமிழகத்தில் தனி கல்வி திட்டம் – விரைவில் அமல்! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயம் என்று அண்மையில் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கல்வி திட்டம்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த கல்வி கொள்கையை செயல்படுத்துமாறு மத்திய அரசு, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் கல்வித்துறை தொடர்பான நடவடிக்கைகளில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் முறைகளையே பின்பற்றி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் வேலூர் முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழகத்திற்கு தனி கல்வி திட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசு பணிகளில் சமூக நீதிக்கொள்கை – சட்ட வல்லுநர் குழு அமைப்பு! அரசு உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும் நம் மாநிலத்தில் இரண்டு மொழி கொள்கையே போதும்.. இந்தி வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். எனினும் விருப்பம் உள்ளவர்கள் இந்தியை கற்று கொள்ளலாம். அதனை படிக்கலாம் என்றும் கூறியுள்ளார். தற்போது தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதற்கு தமிழக அரசு கட்டாயம் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார்.