செப்.21 ( நாளை) தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு – உஷார் பொது மக்களே!
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 21ம் தேதியான நாளை பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. முறையாக மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது அங்கு, மின்வாரியத்தில் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. அரசின் அறிவிப்பின் படி மின்தடை அறிவிப்புகள் முறையாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது, மின் பாதைகள், மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையத்தின் உபகரணங்களில் உள்ள பழுதுகள் நீக்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் முழுவதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், செப்டம்பர் 21ம் தேதியான நாளை ( புதன்கிழமை) பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்வாரியத்தில் பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் ப.பாலசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் “Influenza” காய்ச்சல் – அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள அரசு!
Exams Daily Mobile App Download
இதனால் பெரியகுளம் கடமலைக் குண்டு துணை மின் நிலையத்தின் கடமலைக்குண்டு, ராஜேந்திராநகர், மயிலாடும்பாறை, பாலூத்து, வருசநாடு, துரைசாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, அருகவெளி, நரியூத்து, வாலிப்பாறை, சிறைப்பாறை, குமணன்தொழு, மந்திச்சுனை, தங்கம்மாள்புரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்