தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,647 பேருக்கு கொரோனா உறுதி; 19 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை தினசரி அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அறிக்கையின் படி, இன்று மட்டும் 1,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 1,647 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,48,688 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,49,619 ஆக உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 4,56,04,563 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அறிக்கையின் படி, மருத்துவமனைகளில் 16,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,619 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25,96,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 35,379 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 15,46,181 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 944 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 11,02,469 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 703 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 198 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 548097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.