செப்.20 தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் – மின்வாரிய அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர மின்தடை பற்றிய அறிவிப்புகள் முறையாக தெரிவிக்கப்பட்டு, மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை திருச்சியில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் மாதாந்திர மின்வாரிய பாமரிப்பு பணிகளின் போது, வயர்மேன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பலர் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் தமிழக அரசு மின்வாரிய பராமரிப்பு பணிகளின் போது குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதனை மீறி ஏற்படும் விபத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக முறையாக அனைத்தும் சோதிக்கப்பட்ட பிறகு தான் பணிகள் தொடங்கப்படுகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 20ம் தேதியான நாளை ( செவ்வாய்கிழமை) அன்று திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் மின்விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
மின்தடை பகுதிகள்:
ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டர், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல்நகர், வ.உ.சி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி பகுதிகளிலும், வாழவந்தான்கோட்டை, வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்