திருப்பதியில் செப்.17 பிரமோற்சவ விழா – பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு!
திருப்பதியில் வரும் 17ம் தேதி பிரமோற்சவ விழா தொடங்க உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்பதிவு அடிப்படையிலும் நேரடியாகவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தினசரி 70,000 பக்தர்களுக்கு மேல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு திருப்பதியில் செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவின் முதல் நாள் ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சுவாமிக்கு காணிக்கையாக அளிக்கப்பட உள்ளது.
இந்த வருடம் பிரமோற்சவ விழாவில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக மலைப்பாதையில் மாநில அரசு சார்பாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒலெக்ர்டா நிறுவனம் சர்பாக இந்த பேருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் மலைப்பாதையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் வகையிலும் மின்சார பஸ் இயக்க முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12வது உலக தமிழ் சங்க மாநாடு திருச்சியில் நடத்த முடிவு – தமிழக அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த மின்சார பேருந்தில் 36 இருக்கைகள், குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின்சார பேருந்தில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்து சுமார் 300 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மோற்சவ விழா நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் மற்றும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்