விஜய் டிவியில் சில மாதங்களுக்கு நிறுத்தப்படும் பிரபல சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், செந்தூரப்பூவே சீரியல் ஒளிபரப்பு திடீரென சில மாதங்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தூரப்பூவே நாடகம்:
தமிழ் தொலைக்காட்சியில் காலை முதல் மாலை வரை பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் குறிப்பாக விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் அன்றாட வாழ்க்கையில் அங்கமாக மாறிவிட்டது. இந்நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். புதிது புதிதாக பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் அதற்கு வரவேற்பு குறைந்தபாடில்லை.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே சீரியல் மக்களின் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த சீரியலில் ஹீரோவாக முன்னாள் பிரபல நடிகர் ரஞ்சித் நடிக்கிறார். மேலும் அவரது மனைவி பிரியா ராமனும் இந்த சீரியலில் முதல் மனைவியாக நடிக்கிறார். கடந்த சில நாட்களாக மாயாஜாலம், மந்திரம் போன்ற காட்சிகளாக இடம் பெற்று வருகின்றன. இந்நிலையில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.
அதனால் இந்த சீரியல் சில மாதங்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியா ராமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் கூட இந்த சீரியல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீரியல் நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். மேலும் பிக் பாஸ் ஒளிபரப்பால் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பு நேரமும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.