தேர்வு மையம் செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க புதிய அறிவிப்பு
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதனால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் கூட மூடப்பட்டுள்ளது.
9 மற்றும் 11 வகுப்பு தேர்வு – CBSE விளக்கம்
பள்ளிகளில் ஆண்டுத்தேர்வும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான கலந்தாய்வும் கேள்விக்குறியாகியுள்ளது.
வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையங்கள் செல்வதற்கு ஏற்படும் சிக்கல்களை தீர்க்க புதிய தெளிவான அறிவிப்பு வரும் 19 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தது உள்ளார்.
வரும் ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு மையங்கள் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். ஏனெனில் பொது போக்குவரத்து இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் இதற்கான மாற்று வழியினை குறித்து அமைச்சர் விரைவில் அறிவிக்க உள்ளார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |