ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இந்தியாவில் கொரோனா காலத்தில் ரயில் நிலையங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில் பயணிகள்
இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் அலுவலகம், சுற்றுலா மற்றும் பிற இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.அதனால் கொரோனா காலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ரயில் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. இதையடுத்து தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றின் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனால் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வழக்கம் போல ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் விரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் ஜாக்பாட்.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்தும் அரசு – சூப்பர் செய்தி!
Exams Daily Mobile App Download
அதன்படி வருகிற 19ஆம் தேதி முதல் செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை மற்றும் திருச்சி ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 11.30, 12.02, 12.13, 1.20 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் வழக்கத்தை விட 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே மயிலாடுதுறைக்கு வந்தடையும். அதாவது மாலை 5.10 மணிக்கு முன்னதாக 4.25 மணிக்கு மயிலாடுதுறையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.