B.Ed பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – நவ.29 முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்!
தமிழகத்தில் கல்வியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 2020 – 21 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு வரும் நவம்பர் 29ம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நவ.29 செமஸ்டர் தேர்வு:
தமிழத்தில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவியதால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் இருந்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நவ.19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் நேரடி தேர்வு நடத்த உள்ளதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இத்தகைய அறிவிப்பை தொடர்ந்து அனைத்து தொழிற்கல்வி கல்லூரிகளும் தற்போது மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்து வருகின்றன.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நவ.21ம் தேதி மெகா முகாம்!
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு தேதி தற்போது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது முதலாமாண்டு கல்வியியல் மாணவர்களுக்கு வரும் நவம்பர் 29 ம் தேதி தேர்வு தொடங்கி டிசம்பர் 6 ம் தேதி முடிவடைவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.