திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிக உற்சாகத்தை அளித்த நிலையில் அவர்களின் ஒவ்வொரு பதிவும் வைரலாகி வருகிறது.
ஷபானா வெளியிட்ட வீடியோ:
சின்னத்திரையில் நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான். இவர்கள் பொதுவாக ஒரே சீரியலில், ஒரே நிகழ்ச்சியில் அல்லது ஒரே சேனலில் பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். ஆனால் அப்படி இதுவரையிலும், ஒன்றாக சேர்ந்து பணியாற்றாத இரண்டு பிரபலங்கள் காதலிப்பதாக வெளியான தகவலை அறிந்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். அது, விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வரும் ஆர்யனும், ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் பார்வதியாக நடித்து வரும் ஷாபனாவும் தான்.
இந்தியாவில் மாத சம்பளம் வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த பட்ஜெட் – முழு விபரம் இதோ!
இவர்கள் காதலிக்கும் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், சில மாதங்களிலேயே திருமண செய்தி பற்றி கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டனர். இவர்களின் திருமண கலாட்டாக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு மிகவும் வைரலாகியது. ஷபானா மற்றும் ஆர்யன் ஜோடியின் ரசிகர்கள் இவர்கள் திருமணத்தை கொண்டாட தொடங்கினார்கள். திருமணத்திற்கு பிறகு, தங்களின் ஒவ்வொரு சிறப்பான தருணங்களையும் இருவரும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வந்தனர்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – யூனியன் பட்ஜெட்டின் அம்சங்கள்!
தற்போது ஷபானா மிகவும் பிசியாக செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். மிகவும் பரபரப்பான காட்சிகள் சீரியலில் வந்து ரசிகர்களை மேலும் உற்சாகம் அடைய செய்து வருகிறது. தற்போது ஷபானா தனது இன்ஸ்டாவில் ஒரு மலையாள படத்தின் வசனத்தை பேசி நடித்துள்ளார். இதற்கு ஒரு கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி அதிக லைக்குகளை குவித்து வருகிறது.