“செம்பருத்தி” சீரியல் ஷபானா, ஆர்யன் விவாகரத்து – முதல்முறையாக விளக்கிய நடிகை! ரசிகர்கள் நிம்மதி!
ஜீ தமிழ் சீரியலில் முதன்முறையாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷபானா. அவருக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.
நடிகை ஷபானா:
புதுமுக நடிகையாக தமிழ் சின்னத்திரையில் செம்பருத்தி சீரியல் மூலமாக அறிமுகமானவர் ஷபானா. முதலில் அவர் நடிக்க குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை மீறி நடித்து சிறந்த நடிகை என்ற விருதை பெற்று இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்யும் நடிகர், நடிகைகள் மத்தியில் ஷபானாவும் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் ஆர்யன் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – குவியும் வாழ்த்துக்கள்!
இருவரும் வேறு மதம் என்பதால் இருவரது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி நண்பர்கள் தலைமையில் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தம்பதி இருவரும் சந்தோசமாக இருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டனர். ஆனால் அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து லட்சங்களை அள்ளிச்சென்ற ப்ரியங்கா – ரசிகர்கள் ஷாக்!
இது பற்றி ஷபானா ஆர்யன் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் ஷபானா நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது விவாகரத்து குறித்த யூடுப் வீடியோக்களுக்கு என்ன பதில் அளிக்க விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு யூடியூபில் வரும் செய்திகளை கண்மூடித்தனமாக நம்பும் பார்வையாளர்களை நினைத்தால் ரொம்ப பாவமாக இருக்கிறது. என்னை பொருத்தவரை அவர்கள் ஒரு சரியான மற்றும் உண்மையான தகவல்களை மக்களுக்கு கொடுப்பதில் கொஞ்சமாவது கண்ணியம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.