இந்து பையனை காதலிக்கும் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் வாழ்த்து!
ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஷபானா. அவரது சினிமா & காதல் பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை ஷபானா:
கேரளாவில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா. முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த பெண்ணான அவர் சினிமாவில் நடிக்க பல தடைகள் ஏற்பட்டது. அந்த தடைகளை தாண்டி சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இடம் பிடித்துள்ளார். சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து அம்மாவின் துணையுடன் திரையில் நடிக்கும் தன்னுடைய கனவை நினைவாகி உள்ளார். மேலும் இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு விஜயதசமி என்ற மலையாள சீரியலில் அறிமுகமானார்.
நடிகை சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து – முதல்முறையாக வருத்தம் தெரிவித்த நடிகை!
அதன் பிறகு தமிழில் செம்பருத்தி சீரியலில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்தார். இவர் சீரியலில் நடிக்கும்போது பொட்டு வைப்பதற்கும், இந்து பையனுடன் காதல் காட்சியை நடிப்பதற்கும் ஷபானாவின் சொந்தபந்தங்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய வெற்றி பயணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடித்து இப்போது வெற்றி கண்டுள்ளார். தமிழில் ஷபானா நடித்த முதல் சீரியல் ஆன செம்பருத்தி சீரியல் மூலம் இவருக்கு எக்கச்சக்கமான விருதுகளும் ரசிகர் கூட்டமும் கிடைத்துள்ளது.
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – சரவணனுடன் புதிய பைக் ஓட்டும் சந்தியா!
மேலும் ஷபானாவின் திருமணம் மற்றும் காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் உலாவியது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஷபானா நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருந்த, நடிகர் ஆர்யன் உடன் மோதிரத்தை மாற்றிக் கொள்ளும் திருமண நிச்சயம் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார். அவரது காதலரும் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.