ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் கதிர் யார் தெரியுமா? நெகிழ வைக்கும் நிஜ வாழ்க்கை! ரசிகர்கள் ஷாக்!
ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் நடிகர் கதிர் தனது வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் குறித்து இந்த பதிவில் காண்போம். இவர் அடைந்துள்ள உயரம் வாழ்க்கையில் நம்ப முடியாத வகையில் உள்ளது.
செம்பருத்தி கதிர்:
ஜீ தமிழ் சேனலில் முதன் முதலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் கதிர். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். நடன நிகழ்ச்சியில் முன்னதாக பிரபலமாக உள்ள நட்சத்திரத்துடன் புதிதாக அறிமுகம் ஆகும் சாதாரண பொதுமக்கள் சேர்ந்து கலந்து கொண்டு போட்டியிட்டு வந்தனர். அதில், கதிரின் திறமையை அந்த போட்டியின் ஸ்நேகாவே அடிக்கடி புகழ்ந்து வருவார். அந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகம் ஆன பலரும் தற்போது சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக உள்ளனர். அந்த நிகழ்ச்சியின் முடிவில் அவருக்கு கிடைத்தது தான் செம்பருத்தி சீரியல் வாய்ப்பு.
நகைச்சுவை நடிகர் “வைகை புயல்” வடிவேலுவிற்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
முதலில், கோயில் திருவிழாக்களில் நடனமாடி வந்தவர், பின்னர் கோயம்புத்தூர் லோக்கல் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த கதிரின் அப்பா லாரி டிரைவர். அவரது அம்மா கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். இந்த சீரியலில் நடிக்கும் போதே ஜீ தமிழில் ‘ஜில் ஜங் ஜக்’ என்ற வார இறுதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் அந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அதன் பிறகு, ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்’ நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தேதி பிரச்சனை காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இணைந்த ‘பாவம் கணேசன்’ பிரனிகா தக்ஷன்யா – அவரே வெளியிட்ட பதிவு!
தனது அப்பா தனது லாரியின் பின்னால் தனது சீரியல் போஸ்டரை ஒட்டி வைத்து, தனது பையன் என்று பெருமையாக சொல்லிக் கொள்வர் என்று கூறினார். மேலும், தனது குடும்பத்தின் மூலமாக தான் தான் இந்த அளவு வெற்றியை அடைந்திருப்பதாகவும் குடும்பம் தான் அவரது உந்துதல் என்றும் கூறியுள்ளார். மேலும், செம்பருத்தி சீரியலுக்காக ‘பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர்’ விருது கிடைத்தது மறக்க முடியாதது என்றும் கூறியுள்ளார். குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்துள்ள கதிர், வெள்ளித்திரையில் ஒரு பெரிய நடிகருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தான் தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால் தவற விட்டு விட்டதாகவும், நல்ல கதாபாத்திரம் அமைந்தால் வெள்ளித்திரையில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.