ஆர்யனுடன் திருமணத்திற்கு பின்னர் ‘செம்பருத்தி’ ஷபானாவின் நெகிழ்ச்சியான பதிவு – குவியும் லைக்குகள்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியல் மூலம் புகழடைந்த ஷபானா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை ஷபானாவிற்கு குவித்து வருகின்றனர்.
நெகிழ்ச்சியில் ஷபானா:
சின்னத்திரையில் அறிமுகம் ஆன தொடக்கத்திலேயே மக்களின் கவனத்தை பெற்ற நடிகை ஷபானா. முதன் முதலில் ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரம் மூலம் அறிமுகம் ஆனவர். இந்த சீரியல் சினிமா அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட காரணத்தால் மக்கள் கவனித்து பார்க்க தொடங்கினர். மேலும் சினிமா பிரபலம் பிரியாராமன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நாயகனாக கார்த்தி நடிக்க, கதையின் நாயகியாக ஷபானா நடித்துள்ளார். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கும் மேலாக செம்பருத்தி தொடர் மிகவும் வெற்றிகரமாக சென்று வருகிறது.
பிரசவத்திற்கு பின் தனது நண்பர்களுடன் நடனம் ஆடிய “பாரதி கண்ணம்மா” பரீனா – ரசிகர்கள் ஷாக்!
மிகவும் திறமைசாலியான ஷபானா தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள தொடங்கினார். முதலில் மிகவும் சாதாரணமாக இருந்த இவரின் நடிப்பு, நாளடைவில் நல்ல முன்னேற்றத்தை கண்டது. இதனால் அதிக ரசிகர்கள் கூட்டம் ஷபானாவிற்கு சேர தொடங்கியது. இளைய தளபதி விஜயின் தீவிர ரசிகையான ஷபானா, ஒரு மேடையில் வெள்ளித்திரையில் முக்கிய நட்சத்திரங்கள் கூடியிருந்த விழாவில் விஜயை போலவே இமிடேட் செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லை காவ்யாவுடன் இணைந்த ஜீவா வெங்கட் – ரசிகர்கள் வாழ்த்து!
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஆர்யனை ஷபானா திருமணம் செய்து கொண்டார். மிகவும் சிறப்பாக நடத்தப்பட்ட இந்த திருமணத்தை அனைத்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் திரும்பி பார்க்கும் படி இருந்தது. சமீப நாட்களாக இவரின் திருமண வாழ்க்கை குறித்து பல வதந்திகள் பரவி வந்தது. இவை ஒரு பக்கம் இருக்க தற்போது ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது 800K பாலோவர்ஸ் ஆக உள்ளதால் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த பதிவிற்கு அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர்.