‘செம்பருத்தி’ ஷபானாவிற்கு கணவர் ஆர்யன் கொடுத்த முதல் பரிசு – அவரே வெளியிட்ட பதிவு!
ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷபானா. அவர் தனது கணவர் முதன்முதலில் கொடுத்த பரிசு ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
நடிகை ஷபானா:
புது முக நடிகையாக தமிழ் சின்னத்திரையில் செம்பருத்தி சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷபானா. முதலில் அவர் நடிக்க குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதிர்ப்பை மீறி நடித்து சிறந்த நடிகை என்ற விருதை பெற்று இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்யும் நடிகர் நடிகைகள் மத்தியில், ஷாபனாவும் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் ஆர்யன் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
“பாக்கியலட்சுமி” சீரியலில் கோலாகலமாக நடைபெற இருக்கும் கோபி, ராதிகா திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்!
அதன் பின் சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணத்திற்கு பின் ஒரே மாதத்தில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வைரலானது. ஆனால் இது குறித்து இருவரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளை பார்த்தால் இருவருக்கும் எந்த சண்டையும் இல்லை எனவும் சந்தோசமாக தான் இருவரும் வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் தல தோனி – ரசிகர்கள் உற்சாகம்! அவரே வெளியிட்ட பதிவு!
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷபானா தனது ரசிகர்களின் கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களது கணவர் உங்களுக்கு வாங்கி கொடுத்த முதல் பரிசு என்ன என கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு ஷபானா இந்த புடவை தான் அவர் வாங்கி கொடுத்தது என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.