ஜீ தமிழில் முடிவுக்கு வரும் ‘செம்பருத்தி’ சீரியல் – கிளைமாக்ஸ் இது தான்!
ஜீ தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் கூடிய விரைவில் முடிவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீரியலின் கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
செம்பருத்தி சீரியல்
விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் முதலான தொலைக்காட்சி சீரியல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சீரியல்கள் என அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிஆர்பியிலும் இந்த தொலைக்காட்சி சீரியல்கள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. அதில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளையும் தாண்டி ஓடிய சீரியல் என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப காட்சிகள் அமைத்து தொடர்ச்சியாக ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
தமிழக இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – காவல் ஆணையாளரின் விழிப்புணர்வு!
மேலும், இந்த செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா, ஆதி கதாபாத்திரத்தில் விஜே அக்னி, அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ரவி சீரியலில் இருந்து விலகினார். இதற்கு பிறகு தான் கார்த்திக் ரவிக்கு பதிலாக விஜே அக்னி ஆதி கதாபாத்திரத்தில் நடிக்க அறிமுகமானார். ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்திற்கு விஜே அக்னி செட்டாகவில்லை. பின்னர், படிப்படியாக மக்கள் விஜே அக்னியையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
தற்போது மட்டுமே செம்பருத்தி சீரியல் 1400 எபிசோடுகளை கடந்துவிட்டது. இந்நிலையில், இன்னும் சில வாரங்களில் செம்பருத்தி சீரியல் முடிவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட ரசிகர்கள் எப்போது சீரியல் நிறைவடையும் என எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். மேலும், எப்படி சீரியலை முடிக்க போகிறார்கள் என ரசிகர்கள் பெருத்த ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.