‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா தனது காதலருடன் வெளியிட்ட முதல் புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷபானா. அவர் தனது காதலன் ஆர்யனுடன் எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
ஷபானா – ஆர்யன்:
ஜீ தமிழில் பிரபலமான செம்பருத்தி சீரியல் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் அதிகமாகிக் கொண்டே போனது. அதற்கு கதைக்களம் ஒரு காரணமாக இருந்தாலும், அதில் நடிக்கும் நடிகர்களும் காரணமாக உள்ளனர். அந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷபானாவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம். மேலும் அவரும் விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யனும் காதலிப்பதாக பேசப்பட்டது.
ஆர்யன் தனது இன்ஸ்டா பக்கத்தில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இரு கைகளை பிடித்தவாறு ஒரு படம் ஒன்றை வெளியிட்டு காதலிப்பதாக தெரிவித்தார். ஆனால் அது ஷபானா தான் என்று அதில் குறிப்பிடவில்லை. இவ்வாறு இருவரும் வெளிப்படையாக இல்லாமல் இருந்தாலும், இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் பரவி வந்தன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் ஜோடி அருமை என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிலும் இருவர் மட்டும் இருக்கும் தனி புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. சீரியல் நடிகர் மதன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் எப்போது வெளிப்படையாக உண்மையை சொல்லப் போகின்றனர் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.