Post Office இன் செல்வ மகள் சேமிப்பு திட்டம் – ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

0
Post Office இன் செல்வ மகள் சேமிப்பு திட்டம் - ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
Post Office இன் செல்வ மகள் சேமிப்பு திட்டம் - ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
Post Office இன் செல்வ மகள் சேமிப்பு திட்டம் – ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

POST OFFICE இல் பெண் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணத்திற்க்காக செல்வ மகள் சேமிப்பு திட்டம் 2015 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ்:

தற்போதைய காலகட்டத்தில் வங்கிகளுக்கு இணையாக தபால் நிலையத்திலும் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. பொது மக்களும் அதிக அளவில் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த திட்டங்களில் கணிசமான வட்டி விகிதத்தில் முதிர்வு தொகை பெறப்படுகிறது. அந்த வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளை பெற்ற நடுத்தர பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம் ஆக உள்ளது. பெண் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்ற தேவைகளுக்கு இந்த முதிர்வு தொகை உதவியாக இருக்கும்.

இன்று முதல் வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு அமல் – அரசு அறிவிப்பு! எதற்கெல்லாம் அனுமதி?

இந்த வகையில் ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டமும் உள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் போஸ்ட் ஆபீஸ் தொடங்கலாம் மற்றும் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இருந்தாலும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் ஆதார் அட்டையுடன், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை ஆகிய ஆவணங்கள் முக்கியமாகும். இந்த கணக்கை ரூபாய் ரூ.250 செலுத்தி துவங்கலாம்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி!

இந்த திட்டத்தின் வைப்பு தொகை குறைந்தபட்சம் ரூபாய் 250 அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 ஆக இருக்கலாம். இந்த சேமிப்பு தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6% வட்டி அளிக்கப்படுகிறது. திட்டத்தின் மதிப்பு தொகையில் 50% வைப்புத் தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக்கொள்ளலாம். இந்த வகையில் முதிர்வு தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது முடிந்தவுடன் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு. இந்த வகையில் மாதம் ஒருவர் ரூ.1000 சேமித்து வந்தால், முதிர்வு தொகையாக ரூ.5.09 லட்சம் பெறுவார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!