இந்திய ரயில்வே குரூப் D காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – ட்விட்டர் ட்ரெண்டிங்!
இந்திய ரயிலேவே துறையில் பல மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள ஆர்.ஆர்.சி., குரூப் டி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிடுமாறு ரயில்வே துறைக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது.
காலிப்பணியிடம்:
கடந்த 2020 முதல் நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் பல முக்கிய நிகழ்ச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகள் மட்டுமின்றி பணியாளர்கள் நியமனத்துக்கான அரசு தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே ரயில்வே துறை தான் மிகப்பெரிய பொதுப்பணித்துறையாகும். லட்சக்கணக்கான பணியாளர்கள் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர்.
காமராஜர் பல்கலை திறப்பு செப்.15க்கு ஒத்திவைப்பு – முதல்வர் அறிவிப்பு!
2019 பிப்ரவரியில் 35,208 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட என்.டி.பி.சி., தேர்வுகளுக்கு 1.2 கோடி இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான முதல் கட்ட தேர்வுகள் டிசம்பர் 2020-ல் தொடங்கி கடந்த ஜூலையில் தான் முடிவடைந்தது. தொடர்ந்து, ஆர்.ஆர்.சி., குரூப் டி பணியிடங்களுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டில் நிலைமை படுமோசமாக இருந்ததால் விண்ணப்பதாரர்கள் அமைதி காத்து வந்தனர். நடப்பாண்டில் கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் குறைந்து நிலைமை சீரடைய தொடங்கி இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
நடப்பாண்டில் 8 மாதங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையிலும், தேர்வு பற்றிய எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் விண்ணப்பதாரர்கள் தேர்வு தேதியை அறிவியுங்கள் என்ற ஹாஷ்டேகுடன் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் ஷ்வினி வைஷ்ணவ் மற்றும் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்தும் வருகின்றனர். ரயில்வே தேர்வு வாரிய அதிகாரிகள், என்.டி.பி.சி., தேர்வின் முதல் கட்டம் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் தேர்வு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.