கடன் தவணைகளை (EMI) வசூலிக்க ஓராண்டு கால அவகாசம் – அரசுக்கு கோரிக்கை!

0
கடன் தவணைகளை (EMI) வசூலிக்க ஓராண்டு கால அவகாசம் - அரசுக்கு கோரிக்கை!
கடன் தவணைகளை (EMI) வசூலிக்க ஓராண்டு கால அவகாசம் - அரசுக்கு கோரிக்கை!
கடன் தவணைகளை (EMI) வசூலிக்க ஓராண்டு கால அவகாசம் – அரசுக்கு கோரிக்கை!

வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு காலம் அவகாசம் அளிக்க உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வாடகை வாகனங்களின் கடன் தவணை:

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே பெரும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவுகிறது. பாமர மக்கள், ஏழை எளியோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஊரடங்கு காரணத்தால் வேலையிழந்து தங்கள் குடும்பங்களை காப்பாற்றுவதற்கு சிரமப்படுகின்றனர். தினக்கூலிகள் முழுவதுமாக வேலையின்றி, ஊதியமும் இன்றி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். தினசரி வாடகைக்கு வாகனங்கள் எடுத்து ஒட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு அனுமதி – மாநகராட்சி அறிவிப்பு!

தங்களது வாகன கடனுக்கான மாதத் தவணையை கூட செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதன் காரணமாக வாடகைக்கு வாகனங்களை இயக்கும் தொழில் புரிவோரும், அதில் பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் வேலையிழந்துள்ளனர். நெடுநாட்களாக வாகனங்கள் இயக்கப்படாததால், சிறிதும் வருமானமின்றி, வீட்டு வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பப்த்தில் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு வருவதால் இந்த வறுமை நிலை தொடர்ந்து நீடிக்கிறது. வாடகை வாகனத் தொழிலானது இழப்பையே சந்தித்து வருகிறது. இவை மட்டுமின்றி, சாலை வரி, சுங்க வரி, மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் போன்றவற்றின் விளைவாக எளிய மக்களால் வாடகை வாகன தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் கைவிடும் கொடுமையான சூழலே நிலவுகிறது. இந்நிலையில் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் வாடகை வாகனங்களுக்கான கடன் தவணையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சிறிதும் மனிதத்தன்மையற்ற செயலாகும். ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என சீமான் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!