TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
TNPSC குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த மாதம் வெளியிட்டது. இதன் அடிப்படையில் தேர்வுக்கு 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய தகவல்:
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்து வருகிறது. கடந்த 2 வருடங்களில் கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை.இதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் வருடக்கணக்கில் காத்திருந்தனர்.இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. எனவே அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அறிவிப்புகளை TNPSC வெளியிட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் அடிப்படையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பதிவு கால அவகாசம் மார்ச் 23 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மே மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பும் அண்மையில் வெளியானது. இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது .குரூப் 4 பதவியில் மொத்தம் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி – கல்வித்துறை அறிவிப்பு!
அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள் ஆகும்.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணபிப்போர் எண்ணிக்கை தினம் தினம் அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும், இதுவரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது.எனவே இதுவரை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்காத தகுதியுடையவர்கள் இன்று விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஜூலை 24-ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெறும். 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிட TNPSC முடிவு செய்துள்ளது.