ஒரு கிலோ மாம்பழம் 2.7 லட்ச ரூபாய் – காவலர்கள், நாய்கள் புடைசூழ பாதுகாப்பு!
உலக பழ சந்தையில் 1 கிலோ ரூ.2.70 லட்சத்திற்கு விற்கப்படும் அரிய வகை மாம்பழ மரத்தினை பாதுகாக்க அதன் உரிமையாளர்கள் தனியாக காவலர்கள் மற்றும் 6 நாய்களை நியமனம் செய்துள்ளனர். இது பலரையும் வியப்படைய செய்துள்ளது.
அரிய வகை மாம்பழம்:
ஜப்பான் நாட்டில் வளரும் ஒரு வகை அரிய வகை மாம்பழம் தான், மியாசாகி மாம்பழம். இந்த மாம்பழ வகை மிகவும் அரிது என்றும் இது உலக சந்தையில் கடந்த ஆண்டு ஒரு கிலோ 2.70 லட்சத்திற்கு விற்கப்பட்டது என்று ஒரு தகவல் உள்ளது. இப்படியாக சிறப்பு வாய்ந்த இந்த அரிய வகை மாம்பழ மரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராணி மற்றும் சங்கல்ப் பாரிக்கர் என்பவர்களுக்கு சொந்தமான நிலத்தில் வளர்ந்துள்ளது.
தமிழகத்தில் 10 நாட்களுக்கு மின்தடை – அமைச்சர் விளக்கம்!
ஆரம்பத்தில் மற்ற மாம்பழ மரங்களை போலவே நினைத்துள்ள இந்த தம்பதிகள் சில நாட்களுக்கு பிறகு இந்த மரத்தில் வளர்ந்த இலைகளை வைத்து இந்த மரத்தினை குறித்து தெரிந்து கொண்டு உள்ளனர். பிறகு, இந்த மரத்தினை கண்ணும் கருத்துமாக பார்த்துள்ளனர். அதே கிராமத்தினை சேர்ந்தவர்கள் சிலர் இந்த மரத்தினை குறித்து தெரிந்து கொண்டு கடந்த ஆண்டு அந்த மரத்தில் இருந்து பழங்களை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக பாரிக்கர் தனது தோட்டத்தில் 4 காவலர்கள் மற்றும் 6 காவல் நாய்களை நியமித்துள்ளார். தற்போது இந்த மரத்தினை அவர்கள் தான் பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாரிக்கர் கூறியதாவது, “இந்த மரத்தின் செடியினை நான் சென்னையில் இருந்து பயணிக்கும் போது ஒருவர் எனக்கு வழங்கினார். அப்போது இந்த மரம் குறித்து எங்களுக்கு எந்த விவரமும் தெரியாது. அதனால் இந்த மரத்திற்கு நாங்கள் “தாமினி” என்று பெயர் வைத்தோம். தற்போது இது குறித்து தெரிந்த பின்பும் எங்களுக்கு இது எப்போதும் “தாமினி” தான் என கூறியுள்ளார்.