தமிழக அரசில் தொகுப்பூதியத்துடன் வேலை – 49 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 49 Security Guard பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் ஊதியம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதி முடிவடையும் முன்பு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திருப்பூரில் உள்ள திருக்கோவில்களில் Security Guard பணிக்கு 49 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள Security Guard பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,300 வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் தேர்வு மூலமோ அல்லது நேர்முக தேர்வு மூலமோ தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் முறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர் அதிகாரபூர்வ இணையத்திற்கு சென்று அதன் விண்ணப்பத்தினை தேர்வு செய்து சரியான முகவரிக்கு கடைசி தேதிக்கு அனுப்புமாறு கூறப்படுகிறது. 07.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.