சென்னையில் ரூ.21,000/-சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்போது பாதுகாப்பு அலுவலர் Security Officer) பணி காலியாக உள்ளதால் அதை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப போவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் இந்த பணிக்கு ஆ பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விதம், வயது, ஊதியம் ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU) |
பணியின் பெயர் | பாதுகாப்பு அலுவலர்( Security Officer) |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DCPU காலிப்பணியிடங்கள்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்போது பாதுகாப்பு அலுவலர் (Security Officer) பணி காலியாக உள்ளது. இந்த பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அலுவலர் கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர் Graduate, Post Graduate Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
குற்றவியல்/ கல்வியியல்/குழந்தை வளர்ச்சி/ உளவியலாளர்/ சமூகவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
DCPU அனுபவம்:
- இந்த பணி சார்ந்த துறையில் 3 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- இந்த பணிக்கு ஆ பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர் நியமனம் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.
DCPU வயது வரம்பு:
- விண்ணப்பதாரர் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் ஆ பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர் நியமனம் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தால் 62 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
DCPU வருமானம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 21,000/- வருமானமாக பெறுவார்.
DCPU தேர்வு முறை:
விண்ணப்பதாரர் அவரது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது அலுவலகத்தில் பெற்று அதை பூர்த்தி செய்து அலுவலகத்தின் முகவரிக்கு 01.04..2022 கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 58, சூரியநாராயண சாலை, இராயபுரம், சென்னை – 13.