8வது முடித்தவர்களுக்கு 289 அரசு காலிப்பணியிடங்கள் – முழு தகவல்களுடன்..!
சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Dumper Operator பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Dumper Operator பணிக்கென மொத்தமாக 289 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பணி குறித்த முழு விவரங்களையும் எளிமையாக கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
South Eastern Coalfields Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:
SECL காலிப்பணியிடங்கள்:
சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Dumper Operator பணிக்கென மொத்தமாக 289 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
SECL கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
All TNPSC Notification 2022
SECL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SECL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Aptitude Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
South Eastern Coalfields Limited விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 21.02.2022 ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பணிக்கு இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள் உடனே விரைந்து தங்களின் பதிவுகளை செய்து முடிக்கவும்.