தமிழகத்தில் 5 நாட்களுக்கு ‘ இந்த’ மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – திடீர் அறிவிப்பு!
டிசம்பர் 6ம் தேதியான இன்று அம்பேத்காரின் நினைவு நாளை ஒட்டி கடந்த வருடம் நடந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு:
சமூக வேறுபாடுகளை ஒழிக்க பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கார். நாட்டின் சட்டங்களை அனைவருக்கும் சமமாக ஈடுசெய்ய போராடியவர் இவர். அம்பேத்காரின் நினைவு நாள் டிசம்பர் 6ம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. அவரின் சமூக சிந்தனை நோக்கங்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவரை கௌரவிக்கும் விதமாகவும் அவரின் நினைவு நாளில் அவரது சிலை அல்லது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் கடந்த வருடம் அம்பேத்காரின் நினைவு நாள் அன்று மயிலாடுதுறை பட்டவர்த்தி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் தலைவர் ஈழவழவன் தலைமையில் அம்பேத்கார் படத்திற்கு மாலை அணிவிக்கும் போது இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில், இன்று அம்பேத்கார் படத்திற்கு மரியாதை செய்ய விடுதலை சிறுத்தைகள் சார்பாக காவல் துறையில் அனுமதி கோரப்பட்டது.
ஆவின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பால் அட்டையுடன் ரேஷன், ஆதாரை இணைக்க அறிவுறுத்தல்!
Exams Daily Mobile App Download
ஆனால், அதேபகுதியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் படத்திறப்பு உள்ளிட்டவைக்கு அனுமதி கோரப்பட்டது. இதனால், இங்கு பிரச்சனைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதால் இதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டு, டிச.5 ம் தேதி இரவு 10 மணி முதல் டிச.10ம் தேதி இரவு 12 மணி வரை 5 நாட்களுக்கு யுரோக மதகடி பகுதியை சுற்றியுள்ள 1 கிமீ பகுதிக்கு 144 (3) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.