வரி செலுத்தாத இடங்களுக்கு சீல் – மாநகராட்சி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!!

0
வரி செலுத்தாத இடங்களுக்கு சீல் - மாநகராட்சி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!!
வரி செலுத்தாத இடங்களுக்கு சீல் - மாநகராட்சி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!!
வரி செலுத்தாத இடங்களுக்கு சீல் – மாநகராட்சி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட ஆண்டுகளாக வரி செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரி:

தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்டவைகள் வாயிலாக கிடைக்கும் வருவாயை கொண்டு அரசு, நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஏராளமானோர் வரி செலுத்தாமல் உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள் குறித்த வழக்கு – தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி!!

Follow our Instagram for more Latest Updates

இவர்கள் உடனடியாக வரியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் வரி செலுத்துவார்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சிலர் சொத்து வரி, தொழில் வரை குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர் பலமுறை அறிவுறுத்தியும் இதுவரை வரி செலுத்தாதமால் உள்ளனர்.

அதனால் சிலருக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரி செலுத்தாதவர்களின் கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகளுக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக வரி செலுத்தாதமால் நிலுவையில் வைத்துள்ளவர்களின் வீடுகள் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!