தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொடக்க நிலை மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அனைவரிடம் இருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டது.
தமிழகத்தில் செப்.30 முதல் இம்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இந்த கருத்துக்கள் முதல்வரிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. மூன்றாம் அலை கொரோனா வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் மருத்துவ குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கல்வியாளர்கள், பெற்றோர்கள் போன்றவர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டது. இவற்றை அடிப்படையாக வைத்து பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
இதையடுத்து பள்ளிகள் திறப்பிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனையின் முடிவில் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.