ஜூலை 5ம் தேதியன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து ஜூலை ஜூலை 5ம் தேதி முதல் வகுப்புகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு
வரவிருக்கும் ஜூலை மாதம் 5ம் தேதி முதல் ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிவடைந்து மீண்டுமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறைக்கு பிறகு புதிய கல்வியாண்டு ஜூலை 4ம் தேதி முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஜூலை 4ம் தேதிக்குப் பதிலாக ஜூலை 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4ம் தேதியன்று ஆந்திரா மாநிலத்திற்கு வருகை தருவதால் குண்டூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவுப்படி, ‘மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூலை 4ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (எய்ம்ஸ்) பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4ம் தேதி திறந்து வைக்க வருகை தர இருக்கிறார்.
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மறுகூட்டல் இன்று முதல் தொடக்கம்! பள்ளிகள் இயக்ககம் அறிவிப்பு!
இப்போது பிரதமரின் வருகை காரணமாக குண்டூர் மாவட்டத்தில் மட்டும் ஜூலை 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று பள்ளிக் கல்வி ஆணையர் சுரேஷ் குமார் உறுதிப்படுத்தினார். இது தவிர குண்டூர் மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பீமாவரம் சென்று புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க இருக்கிறார். இதனால் அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.