ஜூலை 19ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – சண்டிகர் அரசு உத்தரவு!
சண்டிகரில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் வரும் ஜூலை 19ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
சண்டிகரில் கொரோனா தொற்று பாதிப்புகள் காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள அரசு பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ஜூலை 19ம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூலை 19க்கு பின் தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!
அரசின் இந்த முடிவை தனியார் பள்ளிகளும் ஏற்று, இந்த மாதத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் பெற்றோர்களும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வமாக உள்ளார்கள். மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வர், பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களின் கருத்தை கோரியுள்ளதாவும், அதன் பின்னர் ஜூலை 19 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மாநிலத்தின் கல்வி செயலாளர், எஸ்.எஸ். கில் என்பவர் நேற்று பள்ளிகள் திறப்பது தொடர்பான விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பள்ளிகள் மாணவர்களுக்கு காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், ஊழியர்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்கள் பெற்றோர் கையெழுத்திட்ட ஒப்புதல் கடிதத்தை கொண்டு வர வேண்டும். நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாதவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். அனைத்து ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர்களும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய அனைத்து பள்ளிகளின் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.