தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு பரிந்துரை!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு பரிந்துரை!
தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு பரிந்துரை!
தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு பரிந்துரை!

கொரோனா பேரலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளை மீண்டுமாக திறக்கலாம் என்ற பரிந்துரைகளின் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பேரலை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை ஒட்டி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கியது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல் – மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!

ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக பள்ளிகளை மீண்டுமாக மூடக்கூடிய சூழல் உருவானது. இதற்கிடையில் திட்டமிட்ட படி பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தமுடியாததால், ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கீடு குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை துவங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது கொரோனா 2 ஆம் அலை தாக்கமும் குறைந்து வருவதால் பள்ளிகளை மீண்டுமாக திறக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றி பள்ளிகளை ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன் படி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதலாம் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!