மே 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு, ஜூன் மாதம் கோடை விடுமுறை – மாநில அரசு திடீர் அறிவிப்பு!

0
மே 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு, ஜூன் மாதம் கோடை விடுமுறை - மாநில அரசு திடீர் அறிவிப்பு!
மே 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு, ஜூன் மாதம் கோடை விடுமுறை - மாநில அரசு திடீர் அறிவிப்பு!
மே 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு, ஜூன் மாதம் கோடை விடுமுறை – மாநில அரசு திடீர் அறிவிப்பு!

கோடை விடுமுறை காரணமாக மே 14 முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அவற்றில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கையை அடுத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறை:

கொரோனா வைரஸ் கடந்த இரண்டு வருட காலமாக உலகம் முழுவதையும் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக ஒரு புரட்டு புரட்டி விட்டது. அனைத்தும் தலைகீழாக மாறி பல தடைகள் அமலுக்கு வந்தது. அதில் ஒன்றாக கல்வியும் பாதிக்கப்பட்டதால் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வாயிலாக தான் பள்ளி,கல்லூரிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் இந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய ஆரம்பத்தில் வைரஸ் தாக்கம் இருந்தாலும், முந்தய நிலைமையை விட குறைவாக இருந்ததால் தளர்வுகள் உண்டாகி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதன் பிறகு தற்போது 10, 11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. மேலும், கோடை விடுமுறை காலம் குறித்து தகவல்கள் வெளியாகிய நிலையிலும் தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் மாற்று கருத்துக்களாக கோரிக்கைகள் வைத்து கொண்டே வந்தனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் உறுதியாக கோடை விடுமுறை அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மே 14 ம் தேதியான இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 16 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில கல்வித்துறை அறிவிப்பு!

ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மே 14 முதல் விடுப்பு காலம் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது மே 15 முதல் மே 31 வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை வகுப்புகளும், நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும் ஆஃப்லைன் முறையில் வகுப்புகள் செயல்படும் என மாற்றியமைத்துள்ளார் பஞ்சாப் மாநில கல்வித்துறை அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர். மேலும், கோடை கால விடுமுறை ஆனது ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30 வரை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!