ஜூன் 13ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் மட்டும் வருகை தந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு
அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 13 முதல் மீண்டுமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திங்கட்கிழமை முதல் புதிய கல்வியாண்டுக்காக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மட்டுமே வருகை தந்தால் போதுமானது என்றும் ஜூன் 15 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விநியோகம் தொடக்கம்!
இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறைக்கு முன், ஜூன் 13 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா நோய்த்தொற்றுகளின் தொடர்ச்சியான அதிகரிப்பை கவனத்தில் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் மாநில கல்வி ஆணையர் சூரஜ் மாந்தரே, வகுப்புகளை திறக்கும் போது பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்துதல், வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக வெப்பநிலை காரணமாக விதர்பாவில் உள்ள பள்ளிகள் ஜூன் 27 அன்று மீண்டும் திறக்கப்பட விருந்தன. ஆனால், இப்போது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் ஜூன் 24 முதல் பள்ளிகளுக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்