நாடு முழுவதும் செப்டம்பருக்கு பின் பள்ளிகள் திறப்பு – எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது இது குறித்து எய்ம்ஸ் இயக்குனர் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலையாக உருவெடுக்கும் என்றும் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கம்? உரிமையாளர்கள் விளக்கம்!
இந்நிலையில் இந்தியாவில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்க அனைத்து மாநில அரசுகளும் தயக்கம் காட்டி வருகிறது. தற்போது இது குறித்து எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா அவர்கள் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, நாட்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்பே பள்ளிகள் திறப்பு சாத்தியமாகும். தற்போது கோவாக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
வரும் செப்டம்பர் மாதத்தில் குழந்தைகள் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் Zydus Cadila நிறுவனமும் Zycov-D தடுப்பூசி குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த தடுப்பூசி குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருக்கும் போட்டு கொள்ளலாம். இதற்கு அனுமதி கிடைத்தால் குழந்தைகளுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி வழங்கப்படும். எனவே மாநில அரசுகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்திற்கு பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.