1 முதல் 4ம் வகுப்பு வரை அக்.18ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
சண்டிகரில் கோவிட் -19 தொற்றுநோயின் வீழ்ச்சியின் காரணமாக படிப்படியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, தற்போது 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
சண்டிகரில் கொரோனா தொற்று பாதிப்புகள் காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை தினமும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள அரசு பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ஜூலை 19ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.
ICC T20 WC 2021: இந்திய அணியின் ஜெர்சி மாற்றம்! வெங்கடேஷ் ஐயர் & ஷர்துல் தாக்குர் அணியில் சேர்ப்பு!!
அடுத்தகட்டமாக 7 மற்றும் 8 வகுப்புகள் ஆகஸ்டில் நேரடி வகுப்புகளை தொடங்கியது. மேலும், 5 மற்றும் 6 வகுப்புகள் செப்டம்பர் 2 முதல் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக கொரோனா பரவல் அபாயம் குறைந்து உள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்கு திரும்ப அனுமதிக்குமாறு நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், யூடி நிர்வாகம் அக்டோபர் 18 முதல் சண்டிகரில் உள்ள 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி தொடங்க திட்டமிட்டுள்ளது.
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதி வெளியீடு!
இது தொடர்பாக தனியார் பள்ளி சங்கத் தலைவர் எச்எஸ் மாமிக் மற்றும் பல தனியார் பள்ளிகளின் முதல்வர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில், உயர் வகுப்புகளில் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். எனவே நாங்கள் ஆரம்ப வகுப்புகளையும் மீண்டும் தொடங்கினால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் கூட, ஆரம்ப நாட்களில் பதிவு செய்யப்பட்ட 10-15% -ல் இருந்து தற்போது வருகை 50% -க்கு மேல் சென்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.