ஆகஸ்ட் 23ம் தேதி 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு உத்தரவு!
கர்நாடகா மாநிலத்தில் அரசு முன்னதாக அறிவித்துள்ள படி, வரும் 23ம் தேதி முதல் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகள்:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2 ம் அலையின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்டது. . தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் மெல்ல மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அரசு ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகஸ்ட் 23 முதல் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக புதிய சட்டம்? நீதிமன்றம் கருத்து!
இதனால் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இன்று பள்ளிகள் திறப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 23 முதல் 2 சதவீதத்திற்கும் குறைவான கோவிட் நேர்மறை விகிதம் உள்ள மாவட்டங்களில் மட்டும் மீண்டும் பள்ளிகள் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம். முதல்கட்டமாக மாணவர்களுக்கு அரைநாள் மட்டுமே பள்ளி நடைபெறும். நேரடி வகுப்புகளுக்கு வருகை பதிவு கட்டாயமாக்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
மாணவர்கள், பெற்றோர்களிடம் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும். 9 மற்றும் 10 வகுப்புக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை வகுப்புகள் நடக்கும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். பின்னர், மத்திய இடைவேளைக்கு பின்னர், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்று முறைகளில் வகுப்புகள் நடத்தப்படும். இதன் விளைவுகளை பொறுத்து அடுத்த கட்டமாக மற்ற ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.