காலை 8 முதல் மதியம் 12:30 மணி வரை பள்ளிகள் செயல்படும் – வலுக்கும் எதிர்ப்புகள்!
இனி பள்ளிகள் வெள்ளிக்கிழமை அரை பணி நாளாக அதாவது காலை 8 முதல் மதியம் 12:30 மணி வரை செயல்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பல்வேறு தரப்புகளில் இருந்து அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
பணி நேரம்:
ஜார்கண்ட் மற்றும் பீகாரில் உள்ள பல அரசுப் பள்ளிகளுக்குப் பிறகு, உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள ஒரு தனியார் பள்ளி, அப்பகுதியில் உள்ள உள்ளூர் முஸ்லிம்களின் கோரிக்கையின் படி, வெள்ளிக்கிழமையை ‘அரை நாள்’ என்று தன்னிச்சையாக அறிவித்ததற்காக பெற்றோர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் உறுப்பினர்களிடமிருந்து கண்டனத்திற்கு உள்ளானது. இந்த சம்பவம் டெஹ்ராடூனின் விகாஸ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரைட் ஏஞ்சல் பப்ளிக் பள்ளியில் தான் நடந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அறிக்கைகளின்படி, பள்ளியின் வழக்கமான வகுப்பு நேரம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆகும். ஆனால் கடந்த வியாழன் (ஜூலை 22) அன்று, குழந்தைகள் வீடு திரும்பியதும், அவர்களின் டைரியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் 2 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு பள்ளி மூடப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகை நேரம் பொதுவாக மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை இருக்கும். அதனால் தான் இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Verizon தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் பொறுப்பாளர் ராகேஷ் தோமர் இது குறித்து, “பள்ளியின் மேலாளர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். மதவெறியை பரப்புகிறார்கள். அனைத்து மதத்தைச் சேர்ந்த குழந்தைகளும் பள்ளியில் படிக்கின்றனர். பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை உத்தரகாண்ட் கல்வி முறையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அதிகாரி வி.பி.சிங், “இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கைக்காக எங்கள் அறிக்கையை துறையின் உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிப்போம். பள்ளி வெளியிட்ட அரசாணை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பள்ளி நிர்வாகம் வெள்ளிக்கிழமைகளை அரை நாட்களாக அறிவிக்கும் முடிவை திரும்பப் பெற முடிவு செய்தது என்று கூறியுள்ளார்.