மே 16 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – புதிய கல்வியாண்டில் 60 நாட்கள் விடுமுறை! அரசு அறிவிப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்றுநோயால் இழந்த நேரத்தை ஈடுசெய்யும் வகையில் கூடுதலாக 26 வேலை நாட்களை அறிவித்து, மே 16ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
அடுத்து வரவிருக்கும் புதிய கல்வியாண்டுக்கான கல்வி நாட்காட்டியை கர்நாடகா மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது. சமீபத்தில் 2021-22ம் கல்வியாண்டுக்கான கோடை விடுமுறையை அறிவித்த மாநில அரசு தற்போது புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் மே 16 முதல் மீண்டும் துவங்கும் என்று அறிவித்துள்ளது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டை விட புதிய கல்வியாண்டில் 26 கூடுதல் நாட்கள் கற்றல் செயல்பாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நடப்பு நிதியாண்டின் முதல் தவணைக்காலம் மே 16ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி முடிவடையும். அதே போல இரண்டாவது தவணைக்கான பள்ளிகள் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை செயல்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனுடன் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை 48 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், தசரா விடுமுறை 14 நாட்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
மேலும் புதிய கல்வியாண்டின் 330 நாட்களில் தசரா, கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை உட்பட 60 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இதில், இணை பாடத்திட்ட நடவடிக்கைகள், தேர்வுகள், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள், சுற்றுப்பயணம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் 28 நாட்களுக்கு இருக்கும். மீதமுள்ள 228 நாட்கள் வகுப்பறை கற்பித்தலுக்கு இருக்கும். அதே நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி வரை பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.