நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு? மாநில அரசின் நடவடிக்கைகள்!!

0
நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு? மாநில அரசின் நடவடிக்கைகள்!!
நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு? மாநில அரசின் நடவடிக்கைகள்!!
நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு? மாநில அரசின் நடவடிக்கைகள்!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து பல்வேறு மாநிலங்களின் பள்ளிகள் திறப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை தாக்கத்திற்கு பின்னர் பல மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திருப்பினாலும் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை – அமைச்சர் விளக்கம்!

கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக மாணவர்களை பாதுகாத்து கொள்ள தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகள் திறப்பு நடவடிக்கைகள் குறித்து காணலாம்.

ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் துணை ஆணையர் (டி.சி) ஸ்ரீநகர் முகமது அய்ஜாஸ் அசாத் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருவதால் பின்னரே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும், தொடர்ந்து ஊரடங்கு தளர்வு ஏற்படுவதற்கும் அரசாங்கம் பரிசீலிக்கும் என தெரிவித்தார். மக்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றுவது மட்டுமே மக்கள் ஊரடங்கை தவிர்க்க ஒரே வழி என அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின் படி மே 15 வரை மாநிலத்தில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே 6-8 ஆம் வகுப்புகள் மற்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான முதன்மை வகுப்புகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளை நிறுத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. ஆனால் தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. பள்ளி மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பின் படி, மாணவர்களுக்கான ஆஃப்லைன் வகுப்புகள் ஜூன் 28 முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மே 1 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய கல்வி ஆண்டு ஜூன் 14 (இன்று ) முதல் தொடங்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மாநில அரசு இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வகுப்பறைகள் சுத்திகரிப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வித் துறை தொடங்கியுள்ளது

ஹரியானா

ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை முடிவு செய்யுமாறு மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பள்ளி வாரியாக மாணவர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தரவுகளை அனுப்ப கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவு அனுப்பியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!