பிப்.14 முதல் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு – காவல்துறையினர் கொடி அணிவகுப்பு!
கர்நாடகாவில் வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் படிப்படியாக பள்ளிகள் திறக்க தொடங்கியது. வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வில் நேர மாற்றம்!
இந்த நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்தால் முதல் நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து முதன் முதலாக கொரோனா தொற்று தீவிரமெடுக்க தொடங்கிய கர்நாடகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அம்மாநில அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. இதன் விளைவாக கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் பிப்ரவரி 14ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? முதல்வரின் முடிவு!
பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து ஒழுங்கை நிலைநாட்ட பெங்களூரு ஊரக மாவட்டம் தொட்டபல்லாபுர் நகரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் வெடித்த வன்முறையால் ஏற்பட்ட அச்சத்தை தவிர்க்கும் வகையில் ரோந்து வாகனம், துப்பாக்கி ஏந்திய போலீசார், பெண் போலீசார் என உயர் காவல்துறையினர் முன்னிலையில் நகரம் முழுவதும் ஊர்வலமாக வந்தனர். அச்ச உணர்வை போக்கவே கொடி அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.