1 -12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – அரசு நாளை முக்கிய ஆலோசனை!
தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) நாளை (பிப்.4) ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை உடற்பயிற்சி கூடங்களுடன் மீண்டும் திறப்பது குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) நாளை (பிப்.4) ஆலோசனை நடத்த இருக்கிறது. இதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள பல பெற்றோர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் 1 முதல் 12 வரையுள்ள பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் லெப்டினன்ட் கவர்னர் (LG) அனில் பைஜால் ஆகியோருக்கு கடிதங்கள் மற்றும் மனுக்களை அளித்துள்ளனர்.
இதற்கிடையில் டெல்லியில் கடந்த DDMA கூட்டத்தில், தலைநகரில் கொரோனா நிலைமை மேம்பட்டுள்ளதால், குழந்தைகளின் சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வு மேலும் சேதப்படுவதைத் தடுக்க பள்ளிகளை திறப்பது அவசியம் என்று டெல்லி அரசாங்கம் பரிந்துரைத்தது. ஆனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத போது பள்ளிகளை மீண்டும் திறப்பது சவாலான விஷயம் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குறிப்பிட்டிருந்தார். முன்னதாக தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் மாறுபாட்டால் உருவான கொரோனா மூன்றாவது அலையைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது – கால அவகாசம் நிறைவு!
இப்போது டெல்லியில் கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வருவதால், பள்ளிகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் நாளை (பிப்.4) ஆலோசனை நடத்த இருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு வணிக சங்கங்கள் இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி இருக்கிறது. இதற்கிடையில் டெல்லியில் நேற்று (பிப்.1) 3,028 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 27 இறப்புகள் பதிவாகியுள்ளன.