6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் 1 பள்ளிகள் திறப்பு!
கார்கில் மாவட்டத்தில் கொரோனா பேரலை தொற்று தாக்கத்தினால் கடந்த ஆண்டு முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகளை மார்ச் 1 முதல் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் குளிர்கால விடுமுறை முடித்து 6 முதல் 12 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கிறது.
பள்ளிகள் திறப்பு
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் குளிர்கால இடைவேளைக்கு பிறகு மீண்டுமாக வகுப்புகளை துவங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கார்கில் மாவட்டத்தில் 6 முதல் 12 வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நாளை (மார்ச்.1) முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்க இருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, ‘கார்கில் மாவட்டத்தில் கொரோனா நிலைமை குறித்து ஆய்வு செய்த பிறகு, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் திறக்க முடிவு எடுக்கப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – கைரேகை சரிபார்க்காமலே பொருட்கள் வாங்கலாம்!
அந்த வகையில் குளிர்கால விடுமுறைக்குப் பிறகு, மார்ச் 1 முதல் 6 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மார்ச் 11 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று கார்கில் துணை கமிஷனர் சந்தோஷ் சுகதேவ் குறிப்பிட்டுள்ளார். இப்போது கொரோனா அறிகுறிகளைக் கொண்ட எந்த மாணவரும் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்!
தொடர்ந்து பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் போது கொரோனா தொடர்பான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாணவர்கள் தங்கள் வீடுகளிலும், பள்ளிகளிலும் பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரில், கொரோனா வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக கார்கில் மற்றும் லே லடாக் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.